2.3.10

தொலையாத நினைவுகள்


எத்தனை கூரானது
நீ இன்னும் என் மீது
எய்யாத அம்பு?

என் தூரிகையின் வர்ணத் தீட்டலை
தேர்ந்த வார்த்தை கொண்டு அவமதித்தாய்.

யாரும் எழுதாத என் செல்லக் கவிதையை
கால்கள் ஒடித்து மொழிச் சிறையிலிட்டாய்.

என் மட்டையின் வியர்வை சொன்ன வெற்றிகளை
நீ தோட்டத்துக் கதவோடு நிறுத்திக் கொன்றாய்.

போதும். போதும்.
இரவின் மடியில் புரண்டு
நான் தொழுவதெல்லாம்
என் நினைவுப் பெட்டகத்தின்
சாவி தொலைந்து போய் விடத்தான்.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...