3.3.10

பகல் காட்சி




தெருவெங்கும்
பொங்கி வழிகிறது நிசப்தம்.

வெயிலில் காய்ந்தபடி இருக்கின்றன
ஆளற்ற வாகனங்கள்.
உண்ண எதுவுமின்றிப்
பால் உறைகளைக்
கடித்துக் குதறுகின்றன நாய்கள்.

வியர்வை வண்ணச்
சீருடைப் பணியாளர்கள்
காலி சிலிண்டர்களை உருட்டத்
தூக்கம் கலைகிறார்கள்
வயோதிக அன்பர்கள்.

இளைஞர்களும் இளைஞிகளும்
அயல்நாட்டுத் தெருக்களில்
கனவுகளைத் தேடியபடியிருக்க
பீதி நிறைந்த கண்களுடன்
இருமுகிறார்கள் பெற்றோர்கள்.

அனைத்து வீட்டின் கதவுகளும்
அறைந்து சாத்தப் பட்டிருந்தாலும்
இடுக்குகளின் வழியே கசியும்
தொலைக்காட்சித் தொடர்கள்
தெருச் சாக்கடையில் கலக்க
துர்நாற்றம் தாளாது
உறுமிக் காட்டுகின்றன பன்றிகள்.

நல்லவேளை.
தபால்காரர் ராமலிங்கம்
பலத்த சிரிப்பால்
தெருவையே கழுவி விட
சிலிர்த்தெழுந்தது என் தெரு.

1 கருத்து:

இரசிகை சொன்னது…

superb......!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...