5.3.10

விதைச் சொல்


காற்றோடு கலந்தது
சேமித்த நற்பெயரின்
விதை.
வீதியெங்கும்
துளைக்கிறது
அவதூறுகளின்
விஷநுனி.
அலையாய் அரிக்கிறது
காலடி மண்ணையும்
காலம்.
சகிக்க முடியாதது
செத்த பின்னும்
நான் தினமும்
வாழ்வது.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...