14.5.10

நளபாகம்


இதைப் படிக்கக் கொஞ்சம் கண்டிஷன்ஸ் போடப்போறேன்.

அ) சுடச்சுட சாப்பிட விருப்பம்.
ஆ) வழக்கமான சமையலைக் கொஞ்சம் மாற்றி வேற ருசியை முயற்சிக்கும் ஆர்வம்.
இ)மற்றவர்களை ஆர்வமாக சாப்பிட வைக்கும் ஆர்வம்.
ஈ)எந்த ஊருக்குப்போனாலும் என்ன ஸ்பெஷல் என்று சொல்லும் அறிவு அல்லது தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் மனம்.
உ)சாப்பிடவென்றே ஊரூராய் ஆட்களைக் கூட்டிக்கொண்டு திரியும் வெறி.

இதெல்லாம் உண்டுன்னு சொல்லி யாரெல்லாம் கையைத் தூக்கறீங்களோ அவங்கல்லாம் இதுக்கடுத்த வரிகளையும் தொடர்ந்து படிக்கலாம். மத்தவங்க- அடையார் ஆனந்த பவனோ,எம்.டி.ஆரோ, க்ருஷ்ணா ஸ்வீட்ஸோ- ஒரு போத்தலில் அடைத்து வைத்திருக்கும் வத்தல் குழம்பையோ வேறு ஏதோ ஒரு வஸ்துவையோ சோற்றில் பிசைந்து உள்ளே தள்ளியபடியே ஒரு டி.வி.சீரியல் பார்க்கக்கடவது.

இது எப்படி எப்படிப் போகும்னு என்னால சரியா பேலன்ஸ் பண்ண முடியல.மொதல்ல எந்த எந்த ஊர்ல எங்கெங்க சாப்டிருக்கேன்னு சொல்லப்போறேன்.அதுக்கப்புறம் எந்த எந்த இடங்களெல்லாம் இப்போ இல்லாமப்போயிடுச்சுன்னும் சொல்லப் போறேன். பீடிகை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கோ. அப்பத்தான் சரக்கு எடுபடும் ஸ்வாமி.
(சிலிண்டர் காலி.நாளைக்குப் பத்த வைக்கிறேன் அடுப்பை.)

6 கருத்துகள்:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

ஒரு நல்ல சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்தவனுக்கு சாப்பிட சொல்லித் தரணுமா என்ன? நல்ல ரசனையுடன், பந்தியில் சாப்பிடுவதே ஒரு கலை!! நல்ல மைசூர் ரஸத்தை சர்ரென்று உறிஞ்சி குடிக்கும் போது,ஒரு தோடியோ..ஸஹானாவோ ந்ம்மில் ஒருவர் விஸ்தாரமாய் ஆலாபனை பண்ணும் போது..அந்த ஸமாராதனை நிச்சய்மாய் சொர்க்கம் தான்....

சுந்தர்ஜி சொன்னது…

இப்படி சாப்பிட்றத விடுங்க- பெசறதுக்கே ஆளில்லாமப் போயிட்டாங்க ராமமூர்த்தி ஸார்.
நன்றி உங்களுக்கு. உங்க ஆர்வம் என்னிடமும் தொத்திக்கும்.ஒரு டைரக்‌ஷன் கொடுக்கும்னு நினக்கிறேன்.

இரசிகை சொன்னது…

aakaattum...aakattum..:)

thalaippai paaththathum amma ninaivu vanthuduchchu:)

ஹேமா சொன்னது…

நான் பசிக்கு இருக்கிறதைச் சாப்பிடும் ஒரு ஜென்மம் சுந்தர்ஜி.ஆனா அறிஞ்சுகொள்ள விருப்பம்.
சொல்லுங்க அடுத்த பதிவுக்காக சாப்பிடாமக் காத்திருப்போம்...
ச்ச்...காத்திருக்கேன்.

பத்மா சொன்னது…

ஆஹா சுந்தர்ஜி ! என்கிட்டேயும் பெரிய லிஸ்ட் இருக்கு ...நீங்க எழுதுங்க அப்போ அப்போ ஒரு பின் பாட்டுபாடறேன் .அப்போ சாப்பிட்டு இப்போ இல்லாம போனது மொதல்ல எங்க அம்மா சமையல் ....விருந்துக்கு காத்திருக்கிறேன் ஜி

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி-
ரசிகை.
ஹேமா.
பத்மா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...