1.5.10

ஓய்வாக இருக்கையில்-பை ஜுயி


இப்போது சுவாசப்பை
தொந்தரவு கொடுப்பதால்
இனிமேல் நான்
குடிக்கமுடியாது.
மேலும்
என் கண்கள்
என்னுடன் ஒத்துழைக்க
மறுத்துவிட்டதால்
புத்தகங்களை
ஒதுக்கி வைத்துவிட்டேன்;
ஓய்வு நேரங்களில்
வெறுமனே மனமும் உடலும்
ஓய்வாக உட்கார்ந்திருக்கிறேன்;
வழிநடையில் அலைகிற
கோழிக்குஞ்சுகள்
கூடு திரும்புகையில்
சாயங்காலம் வந்துவிட்டதை
நான் அறிகிறேன்;
பனி விழுந்து இலை உதிர்ந்து
மரக்கிளைகள்
விட்டு விடுதலையாகி
நிற்கின்றன.
நான் என்னுடைய
மிக அமைதியான நிலையை
அடைந்து விட்டதாக
உணர்கிறேன்.
மலைகளில் போய்
அமைதியைத் தேட
அங்கே என்ன இருக்கிறது?

3 கருத்துகள்:

Madumitha சொன்னது…

ஆமாம் சுந்தர்ஜி.
அமைதி வெளியிலா
இருக்கிறது?

சுந்தர்ஜி சொன்னது…

தேடியபடிதான் இருக்கிறார்கள் மதுமிதா.

இரசிகை சொன்னது…

yellaam unarntha vayotheegam........?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...