4.5.10

ராகமாலிகா



ஒரு திருப்பத்தில்
சரேலென ஒலியெழுப்பாது
திரும்பும் வாகனமாய் சிலரின் வருகை.
பண்டிகைக்குப் பின்னும்
கழற்றப்படாத மாவிலைத்தோரணமாய்
சிலரின் இருப்பு.
அணைந்தபின்னும் கமழும் சுகந்தமாய்
சிலரின் வெற்றிடம்.
எப்போதோ பற்ற வைத்த பட்டாசு
இப்போதுதான் வெடித்துப் பயமுறுத்துவதாய்
சாகாது சாகவைத்த சிலரின் மரணம்.

5 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

m......nice!

Madumitha சொன்னது…

எல்லாச் சிலரும் சேர்ந்தால்
பலர் ஆகி விடுவார்களே?

ஹேமா சொன்னது…

வாழ்வின் வரவையும் செலவைவும் எதிர்பார்த்தபடியே நடந்தால் எதுவும் பயமில்லை.வலியுமில்லை சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

க்யா மது?எல்லாச் சிலரும் ஒண்ணாச் சேரமாட்டாங்களே!அதுதானே ப்ரச்சினை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹேமா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...