10.5.11

சொற்பிழை




கடிக்கமுடியாத
கம்மர்கட்டை
தம்மர்தட்
என்றே சொல்வான்
சின்னவன்.

எத்தனை சொன்னாலும்
கோககோலா
தோததோலாதான்.

கன்னுக்குட்டியோ
தன்னுத்துட்டிதான்.

தொத்தாகிடும் 
கொக்கு.

வந்தது காக்காவா
தாத்தாவா எனப் 
புரிய
ஆகும் கொஞ்ச நேரம்.

படுக்கும்போதும்
படிக்கும்போதும்
சொல்லிச்சொல்லி

காவன்னாவும் 
தாவன்னாவும் 
பழகிக்கொண்டான்.

தேடிக்கொண்டிருக்கிறேன் 
நான்

சின்னவன் 
பிராயத்தோடு
தொலைத்த 
தாவன்னாவையும்
துணைக்குவந்த
காவன்னாவையும்.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...