23.6.13

ஓஷோவும், 159 புத்தகங்களும்

தனக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களையும் பற்றித் தனிப்பட்ட முறையில் ஓஷோ பேசிய உரைகளின் தொகுப்பு இவை. 

”நான் நேசித்த புத்தகங்கள்” என்ற உரையை, தன் பற்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும்போது, ஒரு பல் சிகிச்சையாளியின் இருக்கையிலிருந்து 16 அமர்வுகளில் நிகழ்த்தினார் ஓஷோ. 

தேவகீத் என்ற பல் மருத்துவரும், அம்ரிதோ, மற்றும் ஒரு செவிலி - இவர்கள் மட்டுமே குறிப்பெடுத்தவர்கள் - எந்த ஒரு குறிப்பேடும் உபயோகிக்காமல். 

அம்மூவரையும் தாங்கள் கேட்டவற்றைத் தங்கள் நினைவிலிருந்து எழுதப் பணித்து, ஒருவர் எழுத மற்றவர்கள் திருத்தித் தொகுக்க, போன நூற்றாண்டின் மிக முக்கியமான இந்தப் புத்தகம் உருவானது. 

மேலே நீங்கள் பார்த்த/பார்க்கும் வீடியோ, இந்தப் புத்தகம் வெளிவந்த பின்னால் ஒரு தனி நேர்காணலாகப் பதிவு செய்யப்பட்டது. 

ஓஷோ வாழ்ந்த போது அவரால் பராமரிக்கப்பட்ட நூலகம் மிக ப்ரும்மாண்டமானது. அவர் அளவு புத்தகங்களை வாசித்தவர்களும், வாசித்தபின் - அவற்றின் ரசம் பருகி - அவற்றைத் துறந்தவர்களும் இல்லை.

#####

மிக அதிகமான புத்தகங்கள் எழுதி, ஆங்கிலம் உட்பட பரவலாகப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும் பலர் அறியாத ஆச்சர்யமான தகவல் நான் அடுத்துச் சொல்ல இருப்பது. 

இவை எதுவுமே அவர் எழுதியவை அல்ல. எல்லாமே அவர் உரைகளாகப் பேசியவைதான்.  ஒருவேளை அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளால் அவரைத் தவிர்த்துவிட்டவர்கள் தயவு செய்து அவரின் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசியுங்கள். அதன் பிறகு அவரை வாசிக்காது உங்களைத் தடுக்க எந்த ஒரு அவதூறாலும் முடியாது.


நமது ரிஷிகள் வாழ்ந்த காலத்தின் பாணியில் காதால் கேட்கப்பட்டுப் புத்தகங்களாய் வந்தவைதான் ஓஷோவின் எழுத்துக்கள். அவை உலகம் முழுவதும் இன்று கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டாலும், மிகச் சில ஆயிரம் பேர்களால் மட்டுமே புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் படுபவை.

அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை இணைத்திருக்கிறேன்.
 http://www.osho.com/Main.cfm?Area=Shop&Sub1Menu=eBooks&Sub2Menu=eBooksTitles
அவரின் புத்தகங்கள் தமிழிலும் பெரும்பான்மையானவை மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன. 

அவரின் புத்தகங்களில் எது சிறந்தது என்று சொல்வது கடினம். என் இருபதுகளில் ஓஷோ பகவான் ரஜ்னீஷ் என்று அறியப்பட்டு, அவரின் புத்தகங்கள் தடைக்குட்படுத்தப் பட்டிருந்த காலத்தில் என் கையில் கிடைத்த ”No Water; No Moon” தான் முதலில் நான் வாசித்தது.   Tao-The Golden Gate, பஜ கோவிந்தம், நிர்வாண உபநிஷத், A cup of Tea, Krishna: The Man and His philosophy வரை சென்று நீள்கிறது. தொடர்கிறது.

ஸோர்பா தி புத்தா என்றும், இறுதியில் ஓஷோவாகவும் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டவர், தன்  புத்தகங்களுக்கும் சூட்டப்பட்ட பெயர்களின் தலைப்பில் இருந்தே நம்மை ஈர்க்கத் தொடங்குகிறார். 

அவரின் கவித்வமான, மிகத் தெளிவான மொழியின் தொனி நமக்கு சங்கரரையும், ஏசுவையும் நினைவு படுத்துகிறது. ரமண மகரிஷியையும், ஸ்ரீ அரவிந்தரையும் போலத் தனிமையின் ஏகாந்தத்தில் அவர் முக்குளிக்காவிட்டாலும், அவரின் வாழ்வின் காலம் பூராவும் தனிமையின் அருவி பாய்ந்தபடித்தான் இருந்தது. 

அந்தத் தனிமையே, அவருக்கு முன் பயணித்த யாரொருவரின் கருத்துக்களையும் சார்ந்த தாரதம்மியங்களின் மீது அக்கறை கொள்ளாமல், அவருக்கென்று ப்ரத்யேகமான கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் வலிமையைக் கொடுத்திருக்க வேண்டும்.

மௌனத்தின் பேரமைதியில் இருந்துதான் சொற்கள் உதிக்கின்றன. உறைந்த மௌனத்தின் துகிலால் போர்த்தப்பட்டிருக்கும் மனம், எத்தனைக்கெத்தனை ஆழமானதும், சலனமற்றதுமாக இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை சொற்களின் தேர்வும் இருக்கும். 

சில உதாரணங்கள்:

"Ramana’s whole teaching can be collected on a postcard, not even a full page will be needed. And if you want to make a collection of Aurobindo’s writings, they will fill a whole library". 

"Persons like Ramana are very rare – thousands of years pass, then sometimes that quality of being arises. Ramana is like a Buddha, a Jesus, or a Krishna – a very rare phenomenon. To get in tune with a Ramana means to drop your ego completely. Great courage is needed."

”When the sun rises, something rises in you. When the sun sets, something sets in you. When there is a moon, you are different. When there is no moon, you are different. Your body is in a constant, dynamic relationship with the whole.”

”God is not where we are going; God is from where we are coming. And our eyes are fixed on distant stars. We go on looking ahead. We are oriented towards the distant and faraway, and all those goals that we create are our own mind projections. The real goal is from where we are coming. It is in our very nature, it is in our very being, it is the very ground of our existence.”

எல்லா ஞானிகளையும் போலவே அவர் தன் காலத்துக்கு முன்பே தன் போதனைகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவர் பேசியவற்றை மட்டும் படிக்கவே நமக்கு இந்த ஆயுள் போதாது என்பதே நிஜம்.  

ஓஷோவிடமும் நான் கண்ட ஆச்சர்யம் உலகத்தில் இத்தனை விரிவாக வாசித்த ஒரு ஞானியின் பார்வையில் ரமண மகரிஷியைத் தவிர தமிழின் எந்த எழுத்தும் படாமல் இருந்தமைதான்.

இனி அவர் நேசித்த 159 புத்தகங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான குறிப்புத் தருகிறார். புத்தக வெறியர்களுக்கு 250 பக்கங்களுக்குள் இருக்கும் அந்தப் புத்தகம் ஒரு கொடை. 

1 "Thus Spake Zarathustra" - Friedrich Nietzsche
2 "Brothers Karamazov" - Fyodor Dostoevsky
3 "The Book of Mirdad"
4 "Jonathan Livingston Seagull" - Richard Bach
5 "Tao Te Ching" - Lao Tzu
6 "The Parables of Chuang Tzu"
7 "The Sermon on the Mount"
8 "Bhagavad Gita"
9 "Gitanjali" - Rabindranath Tagore
10 "The One Thousand Songs of Milarepa"

1 "The Book" (of the Sufis)
2 "The Prophet" - Kahlil Gibran
3 "The Book of Lieh Tzu"
4 "Dialogue on Socrates" - Plato
5 "The Notes of the Disciples of Bodhidarma"
6 "The Rubaiyat" - Omar Khayyam
7 "Masnavi" - Jalaluddin Rumi
8 "The Isa Upanishad"
9 "All and Everything" - George Gurdjieff
10"In Search of the Miraculous" - P. D. Ouspensky
11 "Leaves of Grass" - Walt Whitman 

1 "The Art of Living" - Lin Yutang
2 "The Wisdom of China" - Lin Yutang
3 "The Talmud"
4 "Shunya Svabhava" - Taran Taran
5 "Siddhi Svabhava" - Taran Taran
6 "Notes from the Underground" - Fyodor Dostoevsky 
7 "Philosophical Investigations" - Ludwig Wittgenstein
8 "Psychosynthesis" - Assagioli
9 "Prose Poems" - Kahlil Gibran
10"Thoughts and Meditations" - Kahlil Gibran

1 "The Fragments of Heraclitus"
2 "The Golden Verses of Pythagoras"
3 "The Royal Song of Saraha"
4 Tilopa's "Song of Mahamudra"
5 "Zen and Japanese Culture" - D. T. Suzuki
6 "Let Go" - Hubert Benoit
7 "Ramakrishna's Parables"
8 "The Fables of Aesop"
9 Nagarjuna's "Mula Madhyamika Karika"
10 "The Book of Marpa"

1 "Brahma Sutras" - Badrayana
2 "Bhakti Sutras" by Narada
3 "Yoga Sutras" - Patanjali
4 "The Songs of Kabir"
5 "The Secret Doctrine" - Madame Blavatsky 
6 "The Songs of Meera"
7 "The Songs of Sahajo"
8 "The Book of Rabiya-al-Adabiya"
9 "The Songs of Nanak"
10 "Viveka Chudamani" by Shankaracharya
11 "The Koran" - Hazrat Mohammed

1 "The Dhammapada" - Gautam the Buddha
2 "Jaina Sutras" - Mahavira
3 "Zorba the Greek" - Nikos Kazantzakis
4 "The Declarations of Al-Hillaj Mansoor"
5 "The Fragments of Mahakashyapa"
6 "Siddhartha" - Hermann Hesse
7 "The Stories of Baal Shem"
8 "The Songs of Farid"
9 "Vigyana Bhairava Tantra" - Shiva
10 "Tatva Sutra" - Uma Swati
11 "The Songs of Naropa"

1 "The Poetry of Malukdas"
2 "Guru Grantha Sahib" (the book of the Sikhs)
3 "The Light on the Path" - Mabel Collins
4 "The Songs of Lalla"
5 "The Verses of the mystic Gorakh-Nath"
6 "The Supreme Doctrine" - Hubert Benoit
7 "Shiva Sutra"
8 "The Songs of Gaurang"
9 "The Songs of Dadu"
10 "The Statements of Sarmad"

1 "The Will to Power" - Friedrich Nietzsche
2 "A New Model of the Universe" - P. D. Ouspensky
3 "The Statements of Sanai"
4 "The Fragments of Dionysius"
5 "At the Feet of the Master" - J. Krishnamurti
6 "The Fragments of Junnaid"
7 "God Speaks" - Meher Baba
8 "Maxims for a Revolutionary" - George Bernard Shaw
9 "The Teachings of Hui Neng"
10 "The Jokes of Mulla Nasruddin"

1 "The Destiny of the Mind" - Haas
2 "The Sayings of Eckhart"
3 "The Sayings of Boehme" 
4 "The Sufis" - Idries Shah 
5 "The Way of Zen" - Alan Watts 
6 "The Sayings of Rinzai"
7 "The Lectures of Hazrat Inayat Khan" 
8 "All of the books of Hazrat Ali Khan"
9 "Jesus, the Son of Man" - Kahlil Gibran
10 "The Madman" - 
Kahlil Gibran

1 "Being and Nothingness" - Jean Paul Sartre
2 "Time and Being" - Martin Heidegger
3 "Tractatus Logico Philisophicus" - Ludwig Wittgenstein
4 "Vimalakirti Nirdesh Sutra"
5 "Commentaries on Living" - J. Krishnamurti
6 "Commentaries" - Maurice Nicoll
7 "Our Life with Gurdjieff" - Hartmann
8 "Shree Pasha" - Ramanuja
9 "The Future Psychology of Man" - P.D. Ouspensky
10 "The Book of Bahauddin"

1 "The Outsider" - Colin Wilson
2 "The Analects" - Confusius
3 "The Garden of the Prophet" - Kahlil Gibran
4 "The Voice of the Master" - Kahlil Gibran
5 "Who am I?" - Maharshi Ramana 
6 "The Mind of India" - Moorehead and Radhakrishnan
7 "Alice in Wonderland" - Lewis Carroll
8 "Alice through the Looking Glass" - Lewis Carroll
9 "The Wanderer" - Kahlil Gibran
10 "The Spiritual Sayings" - Kahlil Gibran
11 "Waiting for Godot" - Samuel Beckett

1 "Tales of Hassidism" - Martin Buber
2 "I and Thou" - Martin Buber
3 "Das Kapital" - Karl Marx (Osho: "Do not read it.")
4 "Lectures on Psychoanalysis" - Sigmund Freud
5 "Meetings with Remarkable Men" - Gurdjieff
6 "The Grantha" (written by an anonymous disciple of Kabir)
7 "The Communist Manifesto" - Karl Marx and Friedrich Engels
8 "The Myth of Sisyphus" - Marcel
9 "The History of Western Philosophy" - Bertrand Russell
10 "The Songs of Dayabai"

1 "Lust for Life" - Irving Stone
2 "The Agony and the Ecstasy" - Irving Stone
3 "Resurrection" - Leo Tolstoy 
4 "Notes on Jesus" - Thomas
5 "War and Peace" - Leo Tolstoy
6 "The Mother" - Maxim Gorky 
7 "Fathers and Sons" - Turgenev 
8 "The Phoenix" - D.H. Lawrence
9 "Psychoanalysis and the Unconscious" - D.H. Lawrence
10 "Light of Asia" - Arnold
11 "Bijak - Kabir's selected songs"
12 One Dimensional Man by Herbert Marcuse
13 "The I Ching"
14 "Nadi Ke Dvip" - Sachidanand Vatsyayan

1 "My Experiments with Truth" - Mahatma Gandhi
2 "Confessions" - Saint Augustine
3 "Anna Karenina" - Leo Tolstoy 
4 "The Art of Tantra" - Ajit Mukherjee
5 "The Tantra Paintings" - Ajit Mukherjee
6 "Bhaja Govindam" - Adi Shankaracharya
7 "Philosophical Papers" - Ludwig Wittgenstein
8 "Zen Flesh Zen Bones" - Paul Reps 
9 "Zen Buddhism" - Christmas Humphries
10 "The Songs of Chandidas"

1 "Shiva Puri Baba" - Bennett
2 "Listen Little Man" - Wilhelm Reich
3 "Principia Mathematica" - Bertrand Russell and Whitehead
4 "Poetics" - Aristotle
5 "Three Pillars of Zen" - Ross
6 "The Gospel of Ramakrishna" - M
7 "The collected works of Ramatirtha"
8 "Principa Ethica" - G.E. Moore
9 "The Songs of Rahim" (Rahim Khan Khana)
10 "Divan" - Mirza Ghalib
11 "The Book" - Alan Watts

16 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

இவற்றில் எத்தனை கைக்கொண்டோம் என்பது முக்கியமல்ல... எவ்வளவு மனதில் கொண்டோம் என்பதே முக்கியம் இல்லையா ஜி...

உபயோகமான பட்டியல். இல்லாதவற்றை தேடித் பெற...

Nagasubramanian சொன்னது…

நீங்கள் சொன்னது உண்மை.
படித்தவர்கள் அத்தனை பேராலும் ஓஷோவின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாது.

அவரது எழுத்துக்கள் மூன்றாம் கோணத்திற்கும் அப்பால் இருக்கிறது.

அவரது புத்தகங்கள் அனைத்தும் அவரது சொற்பொழிவுகளை எழுத்தாக்கம் செய்யப்பட்டவை என அறிந்து வியந்தேன். அதுவும் அந்த சொற்பொழிவு என்பது எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி, அங்கிருக்கும் நபர்கள் கேட்ட கேள்வியின் விளக்கமாகவே அமைந்தைவை என அறிந்து மெய்சிலிர்த்தேன்.

ஒரு முறை சொற்பொழிவுக்கு சென்றவர், தான் பேசும் முன், "வார்த்தைகள் மட்டுமே என்னுடையது. அர்த்தங்கள் உங்களுடையவை" என சொன்னாராம் !!!

எவ்வளவு உண்மை!!!

எளிமையான உண்மை அவரது வார்த்தைகள். உண்மைக்கு அருகில் இல்லாதவர்களுக்கு அதை உணர முடிவதில்லை.

manichudar blogspot.com சொன்னது…

"மௌனத்தின் பேரமைதியில் இருந்துதான் சொற்கள் உதிக்கின்றன. உறைந்த மௌனத்தின் துகிலால் போர்த்தப்பட்டிருக்கும் மனம், எத்தனைக்கெத்தனை ஆழமானதும், சலனமற்றதுமாக இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை சொற்களின் தேர்வும் இருக்கும். "

சுகமாய் ஓஷோ வை வாசிக்க வேண்டும் . மேலும் . அவரது ஆங்கில உரையின் எளிமை , அடர்த்தியுமானது . கடலில் முழுக வாய்க்க வேண்டும் நேரம்! ஆவலை தூண்டியது தங்களின் உரை.

அப்பாதுரை சொன்னது…

10/159.

siddharta ரொம்ப லேசான புத்தகம்; dialog on socratesம் principiaவும் அசுர கனமான புத்தகங்கள் - கருத்தாழத்தைச் சொல்கிறேன்.

இந்தப் பட்டியல் ஓஷோ சொன்னாருன்றதுக்காக ஆகானு ஏத்துக்கணுமா இல்லே கேள்வி கேட்கலாமா? :)

இது யாருக்கான பட்டியல்? யாரால் இது போன்ற extreme எழுத்துக்களை ரசிக்க முடியும்? புத்தக வெறி பிடித்தவராகவே இருந்தாலும் சரி - வாசிப்பை அனுபவிக்க வேண்டாமா? எழுத்தையும் எண்ணத்தையும் வெளீப்பாட்டையும் ரசிக்கவில்லையென்றால் அங்கே வாசிப்பு என்பதன் கற்பே தொலைந்துவிடுகிறதே?

மேற்சொன்ன பட்டியல் என்னைக் கவரவில்லை சுந்தர்ஜி. போலியாகப் படுகிறது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

//இந்தப் பட்டியல் ஓஷோ சொன்னாருன்றதுக்காக ஆகானு ஏத்துக்கணுமா இல்லே கேள்வி கேட்கலாமா? :)//

கேள்விதான் கேட்டுவிட்டீர்களே அப்பாதுரை!:)

//இது யாருக்கான பட்டியல்? யாரால் இது போன்ற extreme எழுத்துக்களை ரசிக்க முடியும்? புத்தக வெறி பிடித்தவராகவே இருந்தாலும் சரி - வாசிப்பை அனுபவிக்க வேண்டாமா? எழுத்தையும் எண்ணத்தையும் வெளீப்பாட்டையும் ரசிக்கவில்லையென்றால் அங்கே வாசிப்பு என்பதன் கற்பே தொலைந்துவிடுகிறதே?//

இது அவருக்கான பட்டியல். அவரால் மட்டுமே ரசிக்க முடியும். ஆனால் இத்தனையையும் வாசித்தபின் போதித்த ஓஷோவின் கருத்துக்கள் புதியவை. யாரும் தொடாதவை. அவர் கடந்த தொலைவை இன்னொரு சிந்தனையாளர் தொடுவதற்கு மிகுந்த தொலைவு பிடிக்கும். எல்லாத் தளங்களிலும் சுயமான மதிப்பீடுகளும், ரசனைகளும் கொண்ட அவரைப் போல் மிகச் சரியான கலவை இதுவரை உலகில் இருந்ததில்லை. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் அவரின் சிந்தனைகள் புதிதாகவே இருக்கும்.

அப்புத்தகங்களின் கழிவை விலக்கி, அவற்றிலிருந்து அவருக்குத் தெளிவு கொடுத்தவை. ஒவ்வொரு புத்தகத்துக்கும் கொடுக்கும் குறிப்புக்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.

//மேற்சொன்ன பட்டியல் என்னைக் கவரவில்லை சுந்தர்ஜி. போலியாகப் படுகிறது.//

மேலே சொன்ன பட்டியல் அநேகமாக எவரையும் கவராது. ஆனால் அது போலியானதல்ல என்று ஓஷோவை வாசித்தவர்களுக்குத் தெரியும் அப்பாதுரை.:))

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மிக்க நன்றி ஜயஜோதி ஜயஜோதி.

ஓஷோவின் சாகரத்தில் மூழ்க நெடுநேரம் உங்களுக்கு வாய்க்கட்டும்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நலமா நாக்ஸ்? வெகுநாட்களுக்குப் பின்.

கவிதைகளை விட உங்கள் கட்டுரைகளில் உங்கள் சிந்தனையின் ஆழம் கண்டு நான் பிரமித்தது உண்டு.

ஓஷோ பற்றிய உங்கள் அவதானிப்புகள் ருசியானவை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ஓஷோ கைக் கொண்ட புத்தகங்களின் பட்டியல் அல்ல அது. அவரை உருவாக்கிய புத்தகங்கள் அவை. அவற்றையெல்லாம் துறந்து அவர் வெகு தூரம் செல்ல உதவிய ஏணிகள் அவை.

ஓஷோவை மட்டும் வாசித்தால் போதும். இல்லாதவற்றைத் தேடிப் பெறலாம் நிலாமகள்.:)

அப்பாதுரை சொன்னது…

ஓஷோ படித்துப் பார்க்கிறேன்.

ஓஷோ ஒரு குற்றவாளி இல்லையோ? அவருடைய போதனைகளுக்கும் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறதா? ஒரு சமூகத்தையே நாசம் செய்த குற்றம் இன்னும் அவர் மீது இருக்கிறதே? தனக்கு ஒரு வழி, தன்னை நம்புகிறவர்களுக்கு ஒரு வழி என்று வாழும் போலிகள் தத்துவம் ஆன்மீகம் என்று போர்வைகளுக்குள் மறைந்து விடுகிறார்கள். இவர்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளின் நேர்முக துரோகங்கள் பரவாயில்லையோ என்று சில நேரம் தோன்றும்.

ஓஷோவின் அறிவாண்மையை வியந்து போற்றத் தோன்றும்ம் அதே நேரத்தில் ஓஷோ ஒரு பாசாங்குப் பேர்வழி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாகப் படுகிறது.

எனினும், உங்கள் பதிவு அந்தப் புத்தகத்தைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது. principiaவையும் platoவையும் படித்தவர் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

கட்டாயம் வாசியுங்கள் அப்பாதுரை.

ஒஷோ மட்டுமல்ல; யாரொருவரின் நுழையத் தேவையில்லாத அல்லது அவசியமற்ற, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் அக்கறை காட்டுவதில்லை. அவரவர்களின் ப்ராபல்யத்துக்கேற்ப குறைகளை ஊதிப் பெரிதாக்குவதில் காட்டும் அக்கறையை, அவர் என்ன எழுதினார்? போதித்தார்? என்றறிய ஒரு கணம் கூட இந்தச் சமூகம் காட்டுவதில்லை.

இது புத்தருக்கும் நேர்ந்தது.சாக்ரடீஸுக்கும், ஏசுவுக்கும் நேர்ந்தது. பாரதி வரைக்கும் அது தொடர்கிறது. செத்த பின்னும் செத்தவனின் எழுத்தைப் படிக்காமல் அவனுக்குச் சிலை வைத்து மாலை போட்டுப் பிச்சைப் ப்ராபல்யம் தேடிக்கொள்ளும் சரித்திரம் உலகமெங்கும் தொடர்கிறது.

ஓஷோவின் எழுத்துக்களில் உள்ள நேர்மை அவர் சமூகத்தைச் சீரழிக்கும் தன்மையுள்ளவரா இல்லையா என்பதைச் சொல்லிவிடும்.

பாசாங்கு ஏதுமற்ற ஓஷோவின் வாழ்க்கையின் மீதான விமர்சனங்கள் சருகு போல் உதிர்ந்து விடும். ஆனால் அவரின் எழுத்துக்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கும்.

நிச்சயம் ஓஷோவை வாசியுங்கள். உங்களின் அலைவரிசையில் மிகச் சரியாய்ப் பொருந்தும் தன்மை கொண்டவை அவரின் தத்துவங்கள்.

அப்பாதுரை சொன்னது…

//அவரவர்களின் ப்ராபல்யத்துக்கேற்ப குறைகளை ஊதிப் பெரிதாக்குவதில் காட்டும் அக்கறையை, அவர் என்ன எழுதினார்? போதித்தார்? என்றறிய ஒரு கணம் கூட இந்தச் சமூகம் காட்டுவதில்லை.
interest point சுந்தர்ஜி. நிறைய உண்மை இருக்கிறது.

கொஞ்சம் ஊதாமலே பார்ப்போமா?

அவர் ஒரெகன் போலீசுக்குக் கொடுத்த வாக்குமூலம், சமூகத்தைச் சீரழிக்கும் தன்மையுள்ளவரா என்றக் கேள்விக்கே அவசியமில்லாமல் அவசியமில்லாமல் செய்துவிடுகிறது. சாதனையாளர்கள் பின்னே சில சறுக்கல்கள் இருப்பது பெரிய விஷயமில்லை; சாதாரணர் பின்னும் சறுக்கல்கள் உண்டு - சாதனையாளர்களென்பதால் சற்று ஒளியூட்டிக் காட்டப்படுகிறது என்பதை ஏற்கிறேன்.

ஓஷோ போன்ற குற்றவாளிகளை பாரதியுடன் ஒப்பிடுவது திடுக்கிட வைக்கிறது சுந்தர்ஜி.

பாரதி ஒரு தியாகி. ஓஷோ ஒரு துரோகி (நிரூபிக்கப்பட்ட வரையில்). பாரதி சாகும் வரை வறுமையில் கஷ்டப்பட்டான். ஓஷோ சாகும்வரை பெரும் வசதியிலிருந்தான். பாரதி தன் சமூகப் பார்வையில் தன்னை மூன்றாவதாகவோ நான்காவதாகவோ வைத்தான்; ஓஷோ தன்னை முதலில் வைத்தான். narcissism என்பது ஓஷோவின் அத்தனை செயல்களிலும் காணப்படுவதாகப் படிக்கிறேன். ஓஷோ போன்றவர்கள் ஒரு நாளும் தாய் நாடு சுதந்திரம் என்று இறங்கியிருக்க மாட்டார்கள். பாரதி போன்றவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் வீர சுதந்திரம் வேண்டி நிற்பார்கள்.

ஓஷோவை ஜெயேந்திர சரஸ்வதியுடன் வேண்டுமானால் ஒப்பிடுங்கள் :) similar propensities.


சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

பாரதியுடன் ஓஷோவை நான் ஒப்பிடவில்லை. ஒருவரை வாழும் போது நெருங்காமல் அவரின் மறைவுக்குப் பின் துதிக்கும் நம் சமூகத்தின் பழக்கத்தைத்தான் நான் குறிப்பிட்டேன். பாரதியின் பின்னணியை, அவரின் எழுத்துக்களை வாசிக்காமல், புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய அவர் மீது ப்ரிட்டிஷ் சுமத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாம் பார்க்க நேருமானால் உண்டாகும் துர்பாக்கியம் போலக் கொடியது எதுவுமில்லை.

//ஓஷோவை ஜெயேந்திர சரஸ்வதியுடன் வேண்டுமானால் ஒப்பிடுங்கள் :) similar propensities.//

ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

வரிக்கு வரி தர்க்கத்தால் ஒருவரை ஒருவர் வெல்வது கால விரயம். இந்த இடுகைக்குப் பொருத்தமான திசையில் நம் விவாதங்கள் அமையவில்லை எனவும் நான் கருதுகிறேன்.

வரலாறு அல்லது செய்திகளின் அடிப்படையில் அல்லாமல்,அவரை நீங்கள் வாசித்த பின் அமையும் கருத்துக்களின் பின்னணி, நம் தர்க்கத்துக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்.அவற்றையும் நாம் சந்திக்க நேரும் ஒருநாளில் எளிதாக நிவர்த்தி செய்து கொள்ளலாம் என நினைப்பதால் நம் விவாதத்தை இத்துடன் முடிக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

யப்பாடி.. நான் தான் சரியா புரிஞ்சுக்கலியா (nothing new there).
என்னவோ தெரியலிங்க, பாரதியாரை யாராவது எதுனா சொன்னா சுர்ர்ர்னு வருது - tolerate பண்ணிப் பழகணும்.

still.. பாரதியின் புதுச்சேரி பின்புலமும் ஓஷோவின் ஒரெகான் பின்புலமும் வெவ்வேறு. the motives are entirely different, இல்லையா? பாரதி தன்னுடைய சீடர் கூட்டம் ஒண்ணு தொடங்கி எப்பவுமே சீரழிக்கவில்லை இல்லையா?

தர்க்கம் இல்லை சுந்தர்ஜி. வெற்றி தோல்வியும் இல்லை. ஓஷோ என்கிற மனிதரின் பிம்பத்தை மறைத்து அவர் எழுத்துக்களை மட்டும் படிக்க முடியுமா என்பது ஒரு கேள்வி. இரண்டாவது இத்தனை பரந்த வாசிப்பு இலக்குகள் போலித்தனமாகத் தோன்றியது - என் எண்ணத்தில். அவ்வளவு தான்.

விவாதம் இல்லை. சுபம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

உங்களுக்காக ஒரு கூடுதல் கருத்துரையுடன் சுபத்தை நான் அர்த்தப்படுத்த விழைகிறேன்.

ஓஷோவுக்கும், பாரதிக்குமான கால வேற்றுமைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. யூகங்களால் அத்தொலைவைக் கடக்க முடியாது.

ஓஷோவுக்காக பாரதியை நான் விட்டுத்தரவும் மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால் இருவரையும் உட்கார வைத்த துலாபாரத்தில் பாரதியின் பக்கம்தான் என் முள் சாயும். அது வேறு.

1980க்குப் பிந்தைய வாழ்வில் ஓஷோவின் உரைகளுக்கும், வாழ்க்கைக்கும் இருந்த முரணில் உலக அரசியல் பின்னணி முக்கியமான பங்கெடுத்து, அவரை வாழ்வின் எல்லை வரை துரத்தி, தாலியம் விஷமூட்டி மெல்லச் சாகடித்தது வரை நீள்கிறது.ரேகன் பங்கு அதில் முக்கியமானது.

அவர் எழுத்தில் இருந்த மெய், இறுதி வரை அவர் வாழ்வின் பின் சூழ்ந்திருந்த புதிரான திரை மறைவு பொம்மலாட்டங்களை கைவிடச் செய்து அவரைப் பற்றிக் கொள்ள வைக்கிறது.

நமக்குள் நிகழும் விவாதங்கள் என்றுமே சத்தியத்தைத் திரை விலக்கிப் பார்க்கச் செய்பவைதானே அன்றி வேறில்லை.

நீங்கள் சொன்ன அந்த சுர்ர்ர்னு வரும் பட்டியலில் பாரதிக்கு அருகாமையில் ஓஷோவும் இருப்பதால் நானும் கொஞ்சம் தடுமாறி விட்டேன். டாலெரன்ஸ் எனக்கும் தேவைதான்.

அரவிந்தர் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியத்துடன் உங்கள் சுபத்தை நான் அர்த்தப்படுத்த நினைக்கிறேன் அப்பாதுரை.

“அறிவு பொய்த்தோற்றங்களை ஆய்ந்து அனுமானித்து ஏற்கிறது. ஞானமோ திரைக்குப் பின் நோக்கி, காட்சியைப் பெறுகின்றது”.

padmanabhan சொன்னது…

Sunderji prakash only Osho'slovers can understand you

நிகழ்காலத்தில்... சொன்னது…

ஓஷோவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள, அவர் சுட்டிக்காட்டும் மனநிலைகளை ஓரளவிற்கேனும் அனுபவித்து இருக்க வேண்டும்.. ஓஷோ எப்படி வாழ்ந்தார் என்பதை விட என்ன சொன்னார் ? அது எனக்குப் பொருந்துகிறதா என்பதே முக்கியம்...

100 சதவீதம் பொருந்துகிறது

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...